search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேமங் பதானி"

    டிஎன்பிஎல் போட்டி இளம்வீரர்களுக்கு சிறந்த தளம் எனவும் கிரிக்கெட்டில் சாதிக்க கடும் பயிற்சி வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி கூறியுள்ளார். #TNPL #hemangbadani
    திருச்சி:

    திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க ஆண்டு விழா, தேசிய கல்லூரி அரங்கத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் மார்ட்டின்ராஜ், திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி கலந்துகொண்டு, மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    மாவட்டங்கள் தோறும் அதிக அளவிலான கிரிக்கெட் மைதானங்கள் இருப்பது சிறப்பான அம்சம் தான். அப்போது தான் நிறைய இளம் வீரர்கள் உருவாகுவார்கள். டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுவது தற்போது இளம் வீரர்களுக்கு சிறந்த தளமாக உள்ளது. வீரர்களாகிய நீங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். உங்களிடம் திறமை இருந்தால் டிஎன்பிஎல், ஐபிஎல் போட்டிகள் மட்டு மல்ல, இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் கூட விளையாட முடியும்.

    சிறிய மாவட்டத்தில் இருந்து வருகிறீர்களா? சிறிய நகரத்தில் இருந்து வருகிறீர்களா? என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. டோனி சிறிய நகரத்தில் இருந்து தான் கிரிக்கெட்டுக்கு வந்தார். முன்னணி கிரிக்கெட் வீரர்களாக உருவாகிய ஜாகீர்கான், சுரேஷ் ரெய்னா, சேவாக் போன்றவர்கள் எல்லாம் சிறிய நகரங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

    ஆனால், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமானால் கடும் பயிற்சி அவசியம். அதிகாலையிலேயே எழுந்து மைதானத்துக்கு சென்று விட வேண்டும். அதேபோல் மாலையிலும் பலமணிநேரம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டில் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் பெற்றோர் கட்டாயப்படுத்தி படிக்க வைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் விளையாடவில்லை என்றால் கட்டாயப்படுத்தி விளையாட வைக்கமாட்டார்கள். நாம் தான் ஆர்வத்துடன் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் பேசும்போது, மாவட்டங்கள் தோறும் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடும் 150 பேரில் 60 முதல் 70 பேர் சிறிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்க ஆலோசனை செய்து வருகிறார்கள். அவ்வாறு அமைக்கப்படுகிறபோது, அங்கு வருங்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் கூட நடத்தப்படலாம் என்றார். #TNPL #hemangbadani
    தூத்துக்குடி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த நிலையில் தோல்விகளில் இருந்து பாடம் படித்து, வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி கூறியுள்ளார். #TNPL2018
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் 20 ஓவர் போட்டியில் நேற்று சென்னையில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய தூத்துக்குடி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தோல்வி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பயிற்சியாளர் ஹேமங்பதானி கூறியதாவது:-
     

    இதற்கு முன் நடந்த 4 போட்டிகளை விட இந்த போட்டியில் பவர்பிளேயில் சிறப்பாக பேட்டிங் செய்தோம். பவர் பிளேயில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்தோம். இதுவே முந்தைய போட்டிகளில் நிறைய விக்கெட்டுகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்த ரன் குவிக்க முடியவில்லை.

    சேப்பாக்கம் மைதானத்தில் 180 ரன்களுக்கு மேல் குவித்தால் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. கடுமையாகப் போராடியும் அந்த ஸ்கோரை எங்களால் எட்ட முடியவில்லை.

    முருகன் அஸ்வின் விளையாடுவது மிக நன்றாக உள்ளது. இந்த சீசன் முழுக்க அவர் எங்களுக்கு மிகவும் சிறப்பான பங்களிப்பு தருகிறார். இதுபோல, எம்.சித்தார்த் பந்து வீச்சில் முடிந்தவரை ஆதரவாக இருக்கிறார். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் ஒத்துழைக்க வேண்டும். தோல்விகளில் இருந்து பாடம் படித்து, வரும் போட்டிகளில் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. முதல் போட்டியில் இருந்தே வெற்றி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதனை சரி செய்வோம்.

    போட்டி முடியும் நேரத்தில், பந்து வீசுவது மிக சிரமமாக இருந்தது. மழை வந்து நின்ற உடனே போதிய ஓய்வின்றி உடனே மீண்டும் போட்டியை தொடங்கிவிட்டனர்.

    ஆடுகளத்தில் ஈரம் நன்றாக காயவில்லை. இதனால் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல கிரிப் கிடைக்கவில்லை. இது வெற்றியை கணிசமாக பாதித்தது. தூத்துக்குடி அணி நன்றாக ஆடினாலும் எங்கள் வெற்றி பாதிக்க, மழையும் ஒரு முக்கிய காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNPL2018 #JTPvCSG
    ×